கிருஷ்ணகிரி, மே 23: திருப்பத்தூர் மாவட்டம் தகரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது உறவினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக குமார் மருத்துவமனையில் தங்கியிருந்தார். தனது பைக்கை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியுள்ளார். நேற்று காலை பார்த்தபோது டூவீலரை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ஜிஹெச்சில் பைக் திருட்டு appeared first on Dinakaran.