கற்கள் கடத்திய லாரி பறிமுதல் டிரைவருக்கு வலை

கிருஷ்ணகிரி, செப்.28: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள், கிருஷ்ணகிரியில் உள்ள பர்கூர்- ஜெகதேவி சாலையில் பாகிமானூர் கூட்ேராடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், ₹7500 மதிப்பிலான உடைகற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் டிரைவர் மற்றும் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் டிரைவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: