அரக்கோணம்: ஐதராபாத்திலிருந்து அரக்கோணம் வழியாக பாண்டிச்சேரி செல்லக்கூடிய விரைவு ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டது. காச்சிக்குடா விரைவு ரயிலில் முன்பதிவு செய்த புதுமணத் தம்பதிகளிடம் 20 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மணிவண்ணன் தனது மனைவி ப்ரீத்தி, குடும்பத்தினருடன் பி5 பெட்டியில் பயணித்த போது கொள்ளையடிக்கப்பட்டது.