இதுகுறித்து, மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் மாணவி ஆதரவின்றி தவித்து கொண்டிருந்தார். இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விஜய்ரஞ்சித் (20), மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விஜய்ரஞ்சித் இரும்பேடு கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டு சென்றுள்ளார். அதன்பேரில், விஜய்ரஞ்சித் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், இரும்பேடு கிராமத்தில் தலைமறைவாக இருந்த விஜய் ரஞ்சித்தை ஆரணி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post மாணவியை சென்னைக்கு கடத்தி பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.