சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2018-ல் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் சதுப்பு நிலங்களை அடையாளம் காண நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக்கொள்ளவும் அரசுக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

The post சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: