தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை அறிந்து கொள்ள பீகார் கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!!

சென்னை : தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை அறிந்து கொள்ள பீகார் கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 250 கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாட்டில் 5 கட்டங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்டவை குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

The post தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை அறிந்து கொள்ள பீகார் கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!! appeared first on Dinakaran.

Related Stories: