குறிப்பிட்ட சில நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் ஜெயக்குமார் தனசிங் கடந்த 30ம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கே, அவரது மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் 30 பேருக்கு காவல்துறை எஸ்.பி. சிலம்பரசன் சம்மன் அனுப்பியுள்ளார். கட்சி நிர்வாகிகள், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் உட்பட 30 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயக்குமார் தொலைபேசியில் கடைசியாக பேசிய நபர்கள் உள்ளிட்டோரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என 30 பேருக்கு காவல்துறை எஸ்.பி. சிலம்பரசன் சம்மன் அனுப்பியுள்ளார். ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
The post நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் வழக்கு; 30 பேருக்கு காவல்துறை சம்மன்! appeared first on Dinakaran.