புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 12 அன்று தேர்வு முடிந்து ஏப்.13 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட விஷயத்தைக் குறிப்பிட்டு, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தீவிர வெப்பம், வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, அனைத்து அரசுகளுக்கும் கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனியார்/சிபிஎஸ்இ பள்ளிகள் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: