தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் அவரை வழிப்பறி கொள்ளையர்கள் அடித்து கொன்றது தெரிய வந்துள்ளது. தஞ்சாவூர் அடுத்துள்ள நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். சிக்கன் கடையில் கிரில் மாஸ்டராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் கடந்த 16ம் தேதி மதுபோதையில் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த வழிப்பறி கொள்ளையர்கள் பிரகாஷை அடுத்து கொன்றுவிட்டு அவரது செல்போன் மற்றும் பைக்கை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழ் நீதி, பிரவீன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கரூர் அருகே அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.