மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா: அலங்கார பணி தீவிரம்

ஊட்டி: மலர் கண்காட்சிக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்கள் மற்றும் புல் மைதானங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்கார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறனர். இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி வரும் 10ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 10 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.

மலர் கண்காட்சிக்காக 45 ஆயிரம் மலர் தொட்டிகளில் டேலியா, கிராந்தியம், பால்சம், இசியாட்டிக் லில்லி, பல்வேறு வகையான மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, சால்வியா ரெணுகுலாஸ் போன்ற மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பல வகையான லில்லியம் மலர்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கும் நிலையில், மலர் கண்காட்சிக்காக மாடங்களில் பூந்தொட்டிகள் அடுக்கும் பணி மற்றும் புதிய கார்டனில் அலங்கார பணிகளும், பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது.

பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், புல் மைதானம் பச்சை கம்பளம் விரித்தார் போல் பசுமையாக காட்சியளிக்கிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு கொய்மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா: அலங்கார பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: