மலர் கண்காட்சிக்காக 45 ஆயிரம் மலர் தொட்டிகளில் டேலியா, கிராந்தியம், பால்சம், இசியாட்டிக் லில்லி, பல்வேறு வகையான மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, சால்வியா ரெணுகுலாஸ் போன்ற மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பல வகையான லில்லியம் மலர்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கும் நிலையில், மலர் கண்காட்சிக்காக மாடங்களில் பூந்தொட்டிகள் அடுக்கும் பணி மற்றும் புதிய கார்டனில் அலங்கார பணிகளும், பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது.
பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், புல் மைதானம் பச்சை கம்பளம் விரித்தார் போல் பசுமையாக காட்சியளிக்கிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு கொய்மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா: அலங்கார பணி தீவிரம் appeared first on Dinakaran.