அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் யானையை பார்த்தவுடன் காரை நிறுத்தினர். அப்போது பாகுபலி யானை ஆக்ரோஷமாக பிளிறியபடியே காரை விரட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த கார் டிரைவர் காரை வேகமாக ஓட்டி சென்றதால் காரிலிருந்த 3 பேர் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து யானை மேட்டுப்பாளையம் – வனபத்ரகாளியம்மன் கோயில் பிரதான சாலையில் சென்று நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சமயபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post மேட்டுப்பாளையத்தில் இன்று காலை ஆக்ரோஷமாக காரை விரட்டிய ‘பாகுபலி’ யானை: பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.