எம்எல்ஏக்களின் அலுவலத்தை திறக்க அனுமதி வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் தேர்தல் அறிவிக்கை வெளியான மார்ச் 16 அன்று மூடப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிமுறை செயல்பாட்டில் இருக்கும் என்பதால் தொடர்ந்து மூடியிருக்கிறது.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்ற ஆணையம் அனுமதித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் மட்டும் மூடி இருப்பது நியாயமில்லை. அவர்களின் செயற்பாடுகளை முடக்குவது நீதியில்லை. அவர்களின் அலுவலகங்கள் திறக்கப்பட தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.

The post எம்எல்ஏக்களின் அலுவலத்தை திறக்க அனுமதி வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: