ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி

சென்னை: திரிசூலம் அடுத்த மூவரசம்பட்டு ஏரியில் நேற்று முன்தினம் ஆண் சடலம் மிதப்பதாக, அப்பகுதி மக்கள் பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், தாம்பரம் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், நங்கநல்லூர் நேரு காலனியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பதும், கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மூவரசம்பட்டு ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்தபோது, தவறி விழுந்து பலியானது தெரியவந்தது.

The post ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: