ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி கே.கே.நகருக்கு வழக்கம் போல் நேற்று மதியம் அரசு நகர பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் டிரைவராக பாஸ்கரன், கண்டக்டராக எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) இருந்தனர். ஸ்ரீரங்கத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வந்த அந்த பஸ் அங்கு பயணிகளை இறக்கி விட்டு பிற்பகல் 3:30 மணியளவில் கே.கே.நகருக்கு புறப்பட்டது. பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாததால் பின்பக்க படிகட்டிற்கு எதிரே உள்ள இருக்கையில் கண்டக்டர் உட்கார்ந்திருந்தார். அப்போது கலையரங்கம் திருமண மண்டபத்தை கடந்து வலது புறம் பஸ் திரும்பிய போது கண்டக்டர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்து படிக்கட்டு வழியாக ரோட்டில் வந்து விழுந்தது. இதில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

The post ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர் appeared first on Dinakaran.

Related Stories: