கிணற்றில் மூழ்கி அக்கா, தம்பி சாவு

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (45), விவசாயி. இவருக்கு சுப்புலட்சுமி (12) என்கிற மகளும், கார்த்திக் (11) என்கிற மகனும் இருந்தனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அருகே உள்ள பார்த்திபன் என்பவரது கிணற்றில் சுப்புலட்சுமி, கார்த்திக் குளிக்க சென்றுள்ளனர். கார்த்திக்கு நீச்சல் தெரியும். ஆனால் சுப்புலட்சுமிக்கு நீச்சல் தெரியாது. இருவரும் கிணற்றில் குளிக்கும்போது சுப்புலட்சுமி நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற கார்த்திக் முயன்றபோது அவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

The post கிணற்றில் மூழ்கி அக்கா, தம்பி சாவு appeared first on Dinakaran.

Related Stories: