ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!

ராமநாதபுர: ராமநாதபுரத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் தாயுமானவர் கோயில் தெருவை சேர்த்தவர் பன்னீர்செல்வம் – சரண்யா தம்பதியினர். காதல் திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பன்னீர்செல்வம் – சரண்யா தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி பன்னீர்செல்வம், சரண்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மனைவி இறந்ததை அடுத்து தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டு பன்னீர்செல்வமும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேறு ஏதேனும் காரணமாக இருக்கும் என்ற கோணத்தில் மோப்ப நாய் உதவியுடன் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்ப பிரச்சனை காரணமாக காதல் மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: