ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறியதாவது; (i) அதன் ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தல் மற்றும் (ii) ஆன்லைன் மூலம் புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்கவும் கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க தடை இல்லை என்றும், ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!! appeared first on Dinakaran.