இதன்பின்னர் 1989 தேர்தலில் ஜனதா தளமும், 1991 முதல் 1999-ம் ஆண்டு வரையிலான 4 தேர்தல்களில் பா.ஜ.க தொடர்ச்சியாகவும் வென்ற தொகுதி இது. 2004ம் ஆண்டு காங்கிரசின் ராஜேஷ் குமார் மிஸ்ரா இத்தொகுதியில் வென்றார். 2009ம் ஆண்டு பா.ஜ.க.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி வெற்றி பெற்றார். 2014ல் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்று நாட்டின் பிரதமரானார். 2019ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமரானார். தற்போது 3வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post மக்களவை தேர்தல்: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல்.! 13ம் தேதி வாகன பேரணியும் நடத்துகிறார் appeared first on Dinakaran.