மதுரை : மதுரை ஆவல் சூரன்பட்டியில் உள்ள உரம் தயாரிக்கும் ஆலையை அகற்றக் கோரி அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.