வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜிவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மாரிச்செல்வம் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மாரிச்செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியளவில் கார் மற்றும் 4 பைக்குகளில் வந்த 15க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், திடீரென அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இது, வீட்டின் சுவர் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது.

மேலும் ஜன்னல் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. பின்னர் அக்கும்பல் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் லோடு ஆட்டோவை மாரிச்செல்வத்தின் லோடு ஆட்டோ என நினைத்து அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், மாரிச்செல்வத்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. அவர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: