முத்துப்பேட்டை, ஜூலை 23: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியாகும், இப்பகுதியில் விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், மீனவர்கள் அதிக அளவில் வசிக்கும் ஒரு பகுதியாகும். இந்த கிராமத்தில் தில்லைவிளாகம் கோவிலடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இயங்கும் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பல்வேறு துறையில் அதிகாரிகளாகவும் முக்கிய பிரமுகராகவும் உள்ளனர்.
