திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 23: திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கிராமத்தில் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 தினங்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீரென நெடும்பலம் ரயில்வே கேட் அருகே அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று மாலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: