கூத்தாநல்லூர் அருகே 700 கிராம் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது; 1 பைக், 2 செல்போன்கள் பறிமுதல்

 

மன்னார்குடி, ஜூலை 23: திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பதுக்கி வைத்து சட்ட விரோத விற் பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது எஸ்பி சதீஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், லெட்சுமாங்குடி – மன்னார்குடி சாலையில் பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவ தாக கூத்தாநல்லூர் போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்ஐக்கள் அண்ணாதுரை, சேகர், எஸ்எஸ்ஐ செந்தில்வேலன், தனிப்பிரிவு ஏட்டுசுதாகர், ஏட்டு கவியழகன் ஆகியோர் அங்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: