தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

 

திருப்பூர்,ஜூலை10: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் பேருந்து கட்டணம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மனிஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு அதிகமாக வசூலிப்பதாக புகார் வரப்பெற்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை அனுமதிக்க வேண்டாம்.

Related Stories: