மன்னார்குடி அருகே வேன் மோதி பைக்கில் சென்ற விவசாயி பலி

மன்னார்குடி, ஜூலை 16: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அத்திகோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் மன்னார்குடியில் இருந்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டி ருந்தார். ஆலங்கோட்டை மெயின் ரோடு அருகே சென்ற போது எதிர் திசையில் வந்த ஆம்னி வேன் பால முருகன் ஒட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விபத்தில் இறந்த பாலமுருகனின் மனைவி ராஜகுமாரி என்பவர் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய ஆம்னி வேனை ஒட்டி வந்த சந்தானகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

 

Related Stories: