சேலம், ஜூன் 22:சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் நேற்று 12வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தின் கூட்டரங்கில் கோட்ட மேலாளர் பன்னாலால் தலைமையில் சிறப்பு யோகா பயிற்சி நடந்தது. இதில், கூடுதல் கோட்ட மேலாளர் சரவணன், கதி சக்தி திட்ட மேலாளர் கங்கா ராஜூ, கோட்ட பணியாளர் நல அலுவலர் கிருஷ்ணமுத்து ராஜன் மற்றும் அலுவலர்கள், ஆர்பிஎப் வீரர்கள், சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். நடப்பாண்டு ஆரோக்கியமான முதுமைக்கு யோகா’’ என்ற கருப்பொருளை கொண்டு, நேற்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் சென்றடைந்த இந்த யோகாசனத்தை ஒவ்வொருவரும் தினமும் செய்து, உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். கோட்ட அலுவலகத்தில் நடந்தது போல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களிலும் ரயில்வேத்துறை சார்பில் யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன. அதிலும், ரயில்வே அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.
சர்வதேச யோகா தினம்
- சர்வதேச யோகா தினம்
- சேலம்
- ரயில்வே கோட்ட அலுவலகம்
- 12வது
- பிரதேச மேலாளர்
- பன்னலால்
- சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம்…
