சேலம், ஜூன் 9: சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களது மகள் விஜயலட்சுமி (17), நெத்திமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கலைச்செல்வி, கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். விஜயலட்சுமி தனது தந்தையுடன் வசித்து வந்தார்.
பெற்றோர் தனித்தனியாக பிரிந்து வாழ்வதால், மாணவி விஜயலட்சுமி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்ட, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
