நெல்லை: நெல்லையில் ெதருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். நெல்லை பேட்டை காட்டு நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (50). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று நெல்லை பகுதியில் தனது வீட்டின் அருகே யூ.கே.ஜி. படிக்கும் 5 வயது சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருப்பதை கண்ட மாணிக்கம் சிறுமியை நைசாக பேசி அழைத்துச் சென்று அவருடன் விளையாடுவது போன்று நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே, சென்று நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் நெல்லை மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வு குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த குழந்தைகள் நல்வாழ்வு குழுமத்தின் வழக்கு பணியாளர் இசக்கியம்மாள் நடந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் 5 வயது சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து மாணிக்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தச்சநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு லோடுமேன் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கிலேயே 2வதுமுறை கைதான சம்பவம் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நெல்லையில் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
