தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவத்தில் கணவர் அடிக்கடி சைக்கோபோல் டார்ச்சர் செய்வார் என மனைவியின் கண்ணீர் வீடியோ வைரலாகி வருகிறது. தஞ்சை இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (40). கார் டிரைவர். இவரது மனைவி அட்சயா (35). 4 வயதில் ஒரு மகன் உண்டு. பி.ஏ பட்டதாரியான அட்சயா, திருச்சி, கோவை நகரங்களில் பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார். அட்சயாவுக்கும், ஒரு வாலிபருக்கும் தொடர்பு இருந்ததாக அவரது கணவன் தர்மராஜா கடந்த 3ம்தேதி மனைவியை காய்கறி நறுக்கும் கத்தியால் வாய், கன்னம், உதடு ஆகிய இடங்களில் சரமாரி குத்தி விட்டு தப்பினார். பலத்த காயம் அடைந்த அட்சயா தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டுக்கோட்டை போலீசார், ராஜாவை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்த 4 வயது மகனை மீட்டு தஞ்சாவூர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அட்சயா நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசியதாவது: தற்போது சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ எதுவுமே இப்போ எடுத்தது கிடையாது. 2025 ஏப்ரல் மாதம் எடுத்த வீடியோ. இதை தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட கூடாது என காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இது பேக் வீடியோ. எனது கணவர் கஞ்சா போதையில், நான் தங்கி இருந்த விடுதியில் வந்து என்னிடம் தகராறு செய்தார். அதில் நிறைய பேர் தங்கி இருக்கிறோம்.
நான் தங்கி இருக்கும் பக்கத்து அறையில் வேறு பெண்களெல்லாம் தங்கி இருந்தார்கள். அவர்களை எல்லாம் அவர் கவர் பண்ணி வீடியோ எடுக்கவில்லை. என்னை மட்டும் கார்னர் பண்ணி வீடியோ எடுத்தார். நான் வேலைக்கு போகக்கூடாது என்பதற்காக பலமுறை டார்ச்சர் செய்து எனக்கு மொட்டை அடித்துவிட்டார். நான் ஸ்லீவ்லெஸ் டிரஸ் போட்டிருந்தேன் தான். ஹாஸ்டலில் இரவு நேரங்களில் நாங்கள் ஸ்லீவ்லஸ் டிரஸ் தான் போட்டு இருப்போம். கஞ்சா அடித்துக்கொண்டு என்னை தாக்குவார். அதனால்தான் நான் ஒரு வருஷமாக அவரை பிரிந்து இருக்கிறேன். அவர் சிகரட்டில் எல்லாம் சூடு வைத்திருக்கிறார். இப்ப கூட நான் வாழ வருகிறேன் என சொல்லிக் கொண்டுதான் வந்தார். என் பிள்ளையையும் போட்டு டார்ச்சர் செய்வார். இவ்வாறு அட்சயா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
