2.250 கிலோ கஞ்சாவுடன் கோவை வாலிபர் உள்ட 2 பேர் கைது

ஈரோடு,ஜூன்2: ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில், ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்ஐ ராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை, வாராகி அம்மன் கோயில் அருகே ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஜீசார் (31), கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக் (30) ஆகியோர் என்பதும், அவர்களை சோதனை செய்தபோது இருவரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2.250 கிலோ கஞ்சாவையும், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: