புதிய அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த பயிர்கடன் தள்ளுபடியை விரைவாக அறிவிக்குமா?

 

ஈரோடு, மே 23: புதிய அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த பயிர்கடன் தள்ளுபடியை விரைவாக அறிவிக்க வேண்டும் என வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மே மாதத்திற்கான மாவட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பெரியசாமி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி ஆகும் என்ற பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். அதுமட்டும் அல்லாமல் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்தினால் சலுகை போய்விடும் என்ற அச்சத்திலும் உள்ளனர். விவசாயிகள் அச்சத்தை போக்க வேண்டும். வருவாய் துறையில் பட்டா மாறுதல் பிரச்னைகள் கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ளன. விவசாயிகள் குறைகளை விரைவாக தீர்வு காண வேண்டும், என்றார்.

Related Stories: