சென்னிமலை,மே22: சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகளான ஹரிணி, கிருபாஷினிகா, கிருபா, தமிழ் அரசு ஆகியோர் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவர் நவீன் கார்த்திகேயன், மாணவிகள் தர்ஷனா , ஜனனி ஆகியோர் 500க்கு 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ம் இடமும் பெற்றுள்ளனர். ஜெய என்ற மாணவி 486 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார்.
