பாம்பு கடித்து முதியவர் பலி

 

ஈரோடு, மே 8: நம்பியூர் அடுத்த ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டான் (60). இவர் கடந்த 2ம் தேதி வீட்டின் திண்ணையில் தூங்கினார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கிட்டானை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிசைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கிட்டான் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் சௌந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: