கொடுமுடி, மே 8: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 725 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.65.65க்கும், அதிகபட்ச விலையாக ரூ.82.10க்கும், சராசரி விலையாக ரூ.76.80க்கும் ஏலம் போனது. மொத்தம் 23,235 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காய் 16 லட்சத்து 92 ஆயிரத்து 307 ரூபாய்க்கு விற்பனையானது.
