கொடுமுடி,ஏப்.25: கொடுமுடி அடுத்த வேலப்பம்பாளையத்தில் இருந்து கொளாநல்லி செல்லும் சாலையில் மலையாத்தா கோட்டை என்ற இடத்தில் சிவன் கோயிலுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள பாறையின் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் நேற்று கிடந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டதால் இறந்தவரின் குறித்து விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
