கிருஷ்ணகிரி, ஏப்.29: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி சிந்தக்கும்மனப்பள்ளியை சேர்ந்தவர் முருகன் (46). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 26ம் தேதி மதுபோதையில், அதேபகுதியை சேர்ந்த வீரபத்திரன் என்பவரது நிலத்துக்கு அருகில் உள்ள குட்டை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென கால்தவறி குட்டைக்குள் விழுந்து, நீரில் மூழ்கி இறந்தார். உறவினர்கள் முருகனை தேடி வந்த நிலையில், அவரது சடலம் நேற்று மாலை குட்டையில் மிதந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
