ஏரியில் மூழ்கி விவசாயி பலி

போச்சம்பள்ளி, ஏப்.29: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன்(40). இவர், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள பெணுகொண்டாபுரம் பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஏரியில் இறங்கி மீன் பிடிக்க சென்றவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சிக்குள்ளான நண்பர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த உறவினர்கள், ஏரியில் இறங்கி மணிகண்டனை தேடினர். இதில், மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த தகவலின்பேரில், மத்தூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மணிகண்டனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

Related Stories: