டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பு

போச்சம்பள்ளி, ஏப்.25: தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அனிக்கப்பட்டு நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால் மது விற்பனை அதிகரித்தது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், மதுபாட்டில்களை முன்னரே வாங்கி வைக்க, போச்சம்பள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர். ஆனால், ஒரு நபருக்கு 10 மது பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும் என விற்பனையாளர்கள் கூறியதை தொடர்ந்து குடிமகன்கள் அருகில் உள்ள சந்தூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, அகரம், மத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள டாஸ்மாக் கடைகளிலும் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரித்தது. அதனை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், வழக்கத்தை காட்டிலும் விற்பனை அதிகரித்தது.

Related Stories: