போச்சம்பள்ளி, ஏப்.21: போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூர் கிராமத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கிராம பெண்கள் முன்னேற்ற அறக்கடளை சார்பில் நடைபெற்ற முகாமில் குழந்தைத் திருமணம் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும், குழந்தைத் திருமணம் தடுப்பு சட்டம் 2006ன் படி தண்டனைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி, அலமேலு, செந்தில்ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். வரலட்சுமி நன்றி கூறினார்.
