கிருஷ்ணகிரியில் ரூ.9.21 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

 

கிருஷ்ணகிரி, ஏப்.20: கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் நடந்த ஏலத்தில் ரூ.9.21 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் முறையில் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், 34 விவசாயிகள் 156 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ.14,391க்கும், குறைந்தபட்ச ரூ.13,709க்கும், உருண்டை ரகம் அதிகபட்சம் ரூ.12,699க்கும், குறைந்தபட்ச ரூ.11,491க்கும், பனங்காலி ரூ.32,023க்கும் விற்பனையானது.

ஆக மொத்தம் 8,280 கிலோ மஞ்சள் ரூ.9.21 லட்சம் ஏலம் போனது. விற்பனை செய்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பழனியம்மாள் கூறுகையில், `கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் தங்கள் விளைபொருளை கிடங்கில் இருப்பு வைத்து சந்தை மதிப்பில் 50 முதல் 75 சதவீதம் வரை, ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் பெற்று கொள்ளலாம். உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வசதியும் உள்ளது,’ என்றார்.

Related Stories: