185 மதுபாட்டில்களை கைப்பற்றிய பறக்கும் படை

நத்தம், ஏப். 23: நத்தம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அழகேசன் தலைமையில் ரோந்து வாகனம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சடையம்பட்டி டாஸ்மாக் கடை அருகே புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது அட்டை பெட்டியை போட்டுவிட்டு யாரோ மர்ம நபர்கள் இவர்களை கண்டதும் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

அங்கு சென்று சோதனை செய்த போது அந்த அட்டை பெட்டியில் 185 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை கைப்பற்றிய பறக்கும் படையினர் நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: