ஆழியாற்றில் மூழ்கி திருப்பூர் கல்லூரி மாணவர் பலி

பொள்ளாச்சி, ஏப்.23: திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சக்கரவர்த்தி (21). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிடெக் ஐடி இறுதியாண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம், கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்கள் 7 பேருடன் பொள்ளாச்சிக்கு சுற்றுலா வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சக்கரவர்த்தி சுழலில் சிக்கி தவித்துள்ளார். இதையறிந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தண்ணீரில் மூழ்கிய சக்கரவர்த்தியை, சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின் அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சக்கரவர்த்தி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Related Stories: