திருமங்கலம், ஏப். 23: திருமங்கலம் ஜவகர்நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமியும் டாக்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் இவர்களின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள பூஜை அறையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள காமாட்சி விளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருள்களை திருடிச்சென்றனர்.இதுகுறித்து டாக்டர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
