பெண் எஸ்ஐயிடம் நகை பறிக்க முயற்சி

திருமங்கலம், ஏப். 23: திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருவபவர் வளர்மதி(52). பணி காரணமாக இவர் திருமங்கலத்தில் குடியிருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கணவர் ரகுராமனுடன் உசிலம்பட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். திருமங்கலம் – உசிலம்பட்டி ரோட்டில் காங்கேயநத்தம் விலக்கு அருகே இவர்கள் சென்ற போது, பின்னால் டூவீலரில் வந்தவர்கள் இவர்கள் மீது மோதுவது போலவந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரகுராமன், அவர்களை கண்டிப்பதற்காக டூவீலரை நிறுத்தினார்.

அப்போது இடிக்க வந்த டூவீலரில் இருந்து இறங்கிய மர்மநபர் எஸ்எஸ்ஐ வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். அவருடன் வளர்மதி போராடினார். இவர்களது சப்தம்கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவரவே மர்ம நபர் டூவீலரில் ஏறி தப்பினார். இந்த போராட்டத்தில் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வளர்மதி காயமடைந்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: