குன்னூர், ஏப். 23: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. குன்னூரில் உள்ள உலக புகழ்பெற்ற சிம்ஸ் பூங்காவில், கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சமவெளி பகுதிகளில் நிலவும் கோடை வெப்பத்தை தவிர்க்க மலைப்பிரதேசமான நீலகிரிக்கு வருவது வழக்கம்.
இன்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதால் தமிழக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. மேலும், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நாளை முதல் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
