தடையை மீறி பட்டாசு உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு

சிவகாசி, ஏப்.23: செங்கமலப்பட்டியில் தடையை மீறி பட்டாசு உற்பத்தி செய்ததாக ஆலை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தங்கல்லை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கீழத்திருத்தங்கல் விஏஓ கதிரேசன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராமலட்சுமி, முத்துக்குமார், சுந்தரமூர்த்தி என 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: