×

பொன்னை அருகே 2 நாட்களாக 10க்கும் மேற்பட்ட கால்நடைகளை கடித்து குதறிய வெறிநாய்கள்

*விவசாயிகள் அச்சம்

பொன்னை : பொன்னை அருகே கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய்கள் கடித்து குதறியதில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிப்படைந்துள்ளது. சில கால்நடைகள் இறந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த எஸ்.என் பாளையம் பகுதியில் பெரும்பாலும் விவசாயம் செய்து ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் வெறிபிடித்து தெருநாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து வருவதாகவும், 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெறிநாய்க்கடியில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 ஆடுகள், 2 மாடுகள் வெறிநாய்க்கடியில் இறந்துள்ளதால். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வெறிபிடித்த தெரு நாய்களை பிடிக்க வேண்டும் எனவும், கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnai ,Vellore district… ,
× RELATED குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை