×

பாடகி ஆஷா போன்ஸ்லே மறைவுக்கு மு.வீரபாண்டியன் இரங்கல்

சென்னை: பாடகி ஆஷா போன்ஸ்லே மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: இந்திய இசை உலகின் மறக்க முடியாத குரல்களில் ஒன்றாக, இந்தியா நேசித்த பன்முகத் திறமை வாய்ந்த குரல் கொண்ட ஆஷா போன்ஸ்லேவின் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. இந்தி மட்டுமன்றி தமிழ் உள்பட பல மொழிகளில் எண்ணற்ற இனிய திரைப்படப் பாடல்களையும், கசல், பாப், பஜன் போன்ற அனைத்து இசை வடிவங்களில் தனித் திறமையை வெளிப்படுத்தி இசை ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தைப் பிடித்தார்.

தமிழ்த் திரையிசையிலும் அவரது குரல் தனித்துவமான இனிமையால் பிரத்யேகமாகவும், புதிய தலைமுறைகளையும் கவரக்கூடியதாகவும், இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை உலகிற்கு நிலைநாட்டிய பெருமையுடையதாகும். கலை எல்லைகளைத் தாண்டி மக்களின் உணர்வுகளுடன் இணையக் கூடிய அவரது திறமை, அவரை ஒரு காலத்தால் அழியாத கலைஞராக மாற்றியது. பல தேசிய விருதுகளையும், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா அவரது மறைவு, இந்திய இசை உலகிற்கு மட்டுமன்றி, கலாச்சார பாரம்பரியத்திற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : M. Veerapandian ,Asha Bhonsle ,Chennai ,Communist Party of India State ,India… ,
× RELATED குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை