எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக-வே முடிவுரை எழுதி விடும் – கி.வீரமணி

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மோடியா, இந்த லேடியா என்று கேட்ட அதிமுக இப்போது இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அவரது கட்சியினர் அம்மா, அம்மா என்றார்கள்.. ஆனால் அவர் இல்லாத சூழலில் அவர் செய்த விஷயங்களையாவது கடைபிடித்தார்களா என்றால் இல்லை என்பது தான் பதில்.

மோடியா இல்லை இந்த லேடியா என்ற கேட்டது போக இப்போதைய அதிமுக கட்சியானது அமித்ஷா ஓடிவா என்று கூப்பிட்டால் உடனடியாக டெல்லிக்கு ஓடுகிறர்கள். தற்போது எடப்பாடியார் என்று அழைக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவரை எடப்பாடி யார்? என்று கேட்கும் நிலைமைக்கு சென்று விடுவார்.

தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தில் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். ஆனால் வரவிருக்கும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவரால் எதிர்க்கட்சி தலைவராக கூட இருக்க முடியாது. அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒழிக்கின்ற வேலையை நாம் செய்ய மாட்டோம், அந்த தாமரையே செய்து அவர்களுக்கு முடிவுரை எழுதப்பட்டு விடும் என்றார். தற்போதைய அதிமுக-வில் அண்ணாவும் இல்லை; திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை. அதிமுக செய்யும் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் திறன் திமுக தலைவர் மற்றும் முதல்வரான ஸ்டாலினுக்கு உண்டு என்றார்.

மத்திய அரசு நம்மிடமிருந்து 1 ரூபாய் வரி வாங்கினால், நமக்கு திருப்பிக் கொடுப்பது வெறும் 28 பைசா தான். இதையும் நாம் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டின் கல்வி உரிமையை, வேலைவாய்ப்பு உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முழங்கி அதன்படி செயல்பட்டு கொண்டிருப்பவர் தான் ஸ்டாலின் என்று குறிப்பிட்டார் கி.வீரமணி.

Related Stories: