சென்னை: அதிமுக வேட்பாளருக்கு உழைப்பதை விட, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு 10 மடங்கு கடினமாக உழைப்போம், என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5 லைட், ஆலந்தூர் ரோடு பகுதியில் நேற்று மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக கூட்டணி இயற்கையானது, அதிமுக வேட்பாளருக்கு உழைப்பதை விட, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு 10 மடங்கு கடினமாக உழைப்போம். அப்படி எங்கள் தலைவர்கள் இந்த கட்சியை வளர்த்தார். கூட்டணிக்காக உயிரைக் கொடுத்து பாடுபடுவோம். மனம் ஒத்த கருத்துடன் அனைவரும் வெற்றி பெறும் எண்ணத்தில் பாடுபடுவோம். கல்வி, நீர் மேலாண்மை, மருத்துவம், தடையில்லா மின்சாரம் எல்லாவற்றுக்கும் முன்னுரிமை கொடுத்தோம். விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். இவ்வாறு கூறினார்.
